இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா!

ஸ்ரீலங்காவில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,995ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் நால்வர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து 2,849 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில், 134 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.